இஸ்லாமாபாத்: இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் விடுவிக்கப்படுகிறார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். அபிநந்தன் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்படுவதாகவும் இம்ரான் அறிவித்துள்ளார். பாகிஸ்தான் வசம் சிக்கியுள்ள தமிழக விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தனை விரைவில் மீட்குமாறு அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அவரை ஒப்படைக்குமாறு இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரிடம் இந்தியா மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்து வந்தது. பல்வேறு சர்வதேச நாடுகளும் களம் இறங்கியிருந்தன.
மேலும் அபிநந்தனை விடுவிக்குமாறு அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் அழுத்தம் கொடுத்து வந்தன. இது குறித்து அமெரிக்க தூதரிடம் பாகிஸ்தான் கூறுகையில், விரைவில் அபிநந்தனை விடுவிப்போம் என்றனர். இந்த நிலையில்தான் தற்போது பாகிஸ்தானில் கைதியாக இருந்து அபிநந்தனை பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒப்படைந்தது.