அதிமுக கட்சியும், தமிழகத்தில் நடக்கும் ஆட்சியும் பாஜக பிடியில் இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டினார்.

காஞ்சிபுரத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்த அவர் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது,

‘மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மக்கள் செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்தார். எம்ஜி ஆருக்கு இருந்த செல்வாக்கும் அவருக்கு உறுதுணையாக இருந் தது. ஆனால் அவர் மறைவுக்கு பிறகு, மத்திய அரசு அதிமுகவை தன் விருப்பப்படி செயல்பட வைக்க பல்வேறுவிதமான தந்திரங் களை செய்து வருகிறது.

ஒருபுறம் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, மறுபுறம் முதல்வர் பன்னீர்செல்வம், மற்றொரு புறம் சசிகலா என மூன்றாக பிரித்து தங்களுக்கு வசதியாக அதிமுகவை பயன்படுத்த நினைக்கிறது. குடியரசு தலைவர் தேர்தலிலும் அதிமுகவை தங்களுக்கு சாதக மாகப் பயன்படுத்த பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.

தமிழகத்தில் காலூன்ற முடி யாத பாஜக இங்கு யாருடைய தயவுடன்தான் செயல்பட முடியும். அதிமுகவை 3 வகையில் பிரித்து வைத்து ஆட்சியிலும், கட்சியிலும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிமுக கட்சியும், ஆட்சியும் பாஜகவின் பிடியில் இருந்து விடுபட வேண்டும். எனவே, அதிமுகவினர் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்’ என்றார்.

-தி இந்து

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *