கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ விருது வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
சினிமாத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக நடிகர் ரஜினிக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் இந்த அறிவிப்புக்காக மத்திய அரசுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். சினிமா, அரசியலை சேர்ந்த பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். சிலர் கமலுக்கு ஏன் இன்னும் கொடுக்கவில்லை என்ற ரீதியில் கருத்துகளை வெளியிட்டார்கள்.