
சென்னை: ‘ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு தமிழகத்துக்கு வருவது உறுதி’ என்று சட்டப்பேரவையில் அமைச்சர் டிஆர்பி.ராஜா தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது.
இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் (குமாரபாளையம் தொகுதி) பி.தங்கமணி பேசியதாவது:எல்லா துறைகளிலும் கட்டணம் உயர்ந்துள்ளது. தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு குறைந்து விட்டது. தொழிற் சாலைகளும் குறைந்து விட்டன. பிறகு எப்படி இரட்டை இலக்க வளர்ச்சி வந்தது. தமிழகத்தைச் சேர்ந்த சிஇஓதான் கூகுள் நிறுவனத்தில் உள்ளார்.

