சேலம் / மதுரை: நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை தொடர்பாக தமிழக அரசு நடத்தும் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத் தில் பாமக பங்கேற்கும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி கூறினார்.
சேலத்தில் நேற்று நடைபெற்ற பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணியின் இல்ல திருமண விழாவில் அன்புமணி பேசும்போது, “கல்வியை கட்டணமின்றி தர வேண்டியது அரசின் கடமை. ஆனால், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரு மொழி என்பதுதான் பாமகவின் மொழிக் கொள்கை. பிற மொழிகளைக் கற்பதில் தவறில்லை, ஆனால் திணிக்கக் கூடாது. மேலும், மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் நிதி தருவோம் என்பதும் தவறு” என்றார்.