Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: அம்பத்தூரில் அதிகாலை பயங்கரம்; கர்நாடகா வங்கியில் பயங்கர தீ: ஆவணங்கள், இருக்கைகள், மேஜைகள் எரிந்து சேதம்
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

அம்பத்தூரில் அதிகாலை பயங்கரம்; கர்நாடகா வங்கியில் பயங்கர தீ: ஆவணங்கள், இருக்கைகள், மேஜைகள் எரிந்து சேதம்

EDITOR

அம்பத்தூர்: அம்பத்தூர் அருகே வங்கியில் இன்று அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அம்பத்தூர் பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கர்நாடகா வங்கி இயங்கி வருகிறது. நேற்று மாலை வேலை முடிந்ததும் ஊழியர்கள், வங்கியை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றனர். வங்கிக்கு, இரவு நேர காவலாளி ஒருவர் பணியில் இருந்து வருகிறார்.இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென வங்கியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை பார்த்ததும் காவலாளி அதிர்ச்சியடைந்தார்.

உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அம்பத்தூர் போலீசார் மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அதற்குள் தீ வங்கி முழுவதும் பரவியது. ஜன்னல் கண்ணாடிகள், அரை கண்ணாடிகள் உடைந்து சிதறியது. தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து செயல்பட்டு தண்ணீரை பீய்ச்சியடித்து மற்ற கட்டிடங்களுக்கும் தீ பவராமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் வங்கியில் உள்ள ஆவணங்கள் மற்றும் இருக்கைகள், மேஜைகள் எரிந்து சேதமானது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது சமூக விரோதிகளின் கைவரிசையாக உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post அம்பத்தூரில் அதிகாலை பயங்கரம்; கர்நாடகா வங்கியில் பயங்கர தீ: ஆவணங்கள், இருக்கைகள், மேஜைகள் எரிந்து சேதம் appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்: சந்தேக நபரின் வீடியோ, புகைப்படங்களை வெளியிட்ட காவல் துறை
  • புதிய மின் இணைப்பு, பெயர் மாற்றம் உள்ளிட்ட மின் வாரிய சேவைகளுக்கு கட்டணம் உயர்வு!
  • சூரிய மின்கலம் தயாரிக்கும் பர்ஸ்ட் சோலார் நிறுவனத்தில் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி முடித்தவர்களுக்கு முக்கியத்துவம்
  • சென்னை விமான நிலையத்திற்கு இ-மெயிலில் தொடரும் வெடிகுண்டு மிரட்டல்கள்
  • வாகன நிறுத்த ஒப்பந்தம் நிறைவு; பொதுமக்கள் கட்டணமின்றி வாகனங்களை நிறுத்தலாம்: மாநகராட்சி அறிவிப்பு
  • காரை ஏற்றி கொல்ல முயன்றதாக சொன்ன வழக்கு; ஒரு மதத்தினர் மீது திடீரென குற்றம்சொல்ல என்ன காரணம்..? படுக்கையில் இருந்தவாறு மதுரை ஆதீனம் மழுப்பல் பதில்

You Might Also Like

ஜெம்-ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் இணை மாற்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை: இந்தியாவில் முதன்முறையாக நடந்தது

July 19, 2025

45 ஏக்கரில் ரூ.167.25 கோடியில் தயாராகிறது செம்மொழி பூங்கா கட்டுமான பணி 85 சதவீதம் நிறைவு

June 25, 2025

மானாமதுரைக்கு புதிய டிஎஸ்பி நியமனம்!

July 14, 2025

ஒரே நேரத்தில் 10 குட்டிகளை ஈன்ற அனகோண்டா பாம்பு!

July 16, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?