சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் அ.சண்முக சுந்தரம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: அரசு உதவி வழக்கு நடத்துநர்(கிரேடு 2) பதவிக்கான முதல்நிலைத் தேர்வு 22.02.2025 முற்பகல் நடைபெற்றது. இத்தேர்விற்கான முதன்மை எழுத்துத் தேர்வு (விரிந்துரைக்கும் வகை) வருகிற 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை மு.ப மட்டும் நடைபெற உள்ளது.
தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.inல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
The post அரசு உதவி வழக்கு நடத்துனர் பதவி முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் appeared first on Dinakaran.