Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: அவிநாசி ரிதன்யா தற்கொலை வழக்கில் கணவர் குடும்பத்தினர் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

அவிநாசி ரிதன்யா தற்கொலை வழக்கில் கணவர் குடும்பத்தினர் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி

EDITOR

திருப்பூர்: அவிநாசி ரிதன்யா தற்கொலை வழக்கில் கணவர் குடும்பத்தினர் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூரை சேர்ந்தவர் அண்ணாதுரை (53). பனியன் நிறுவன அதிபர். இவரது மனைவி ஜெயசுதா (42). இவர்களது ஒரே மகள் ரிதன்யா (27). எம்எஸ்சி பட்டதாரி. ரிதன்யாவுக்கும், இதே பகுதியில் உள்ள ஜெயம்கார்டனை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி- சித்ராதேவி தம்பதியின் மகன் கவின்குமாருக்கும் (27) கடந்த ஏப்ரல் 11ல் திருமணம் நடைபெற்றது. இவர் கார்மெண்ட்ஸ் டிரேடிங் கம்பெனி உரிமையாளர்.

திருமணத்தின்போது ரிதன்யாவிற்கு 300 பவுன் நகையும், மாப்பிள்ளைக்கு ரூ.70 லட்சத்திற்கு சொகுசு காரும் வாங்கி கொடுத்ததோடு, ரூ.2.25 கோடி செலவு செய்து திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி கோயிலுக்கு செல்வதாக காரில் புறப்பட்ட ரிதன்யா கைகாட்டிப்புதூரில் காருக்குள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக, தனது தந்தையின் வாட்ஸ் அப்பிற்கு கதறி அழுதபடி ஆடியோ பதிவை அனுப்பியிருந்தார். அதில், 500 பவுன் நகை வரதட்சணை கேட்டதாகவும், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ரிதன்யாவை கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் தொடர்ந்து சித்ரவதை செய்ததாகவும் கூறியிருந்தார்.

மேலும், தற்கொலைக்கு காரணம் கணவர் கவின்குமார் அவரது பெற்றோர் ஈஸ்வரமூர்த்தி- சித்ராதேவி ஆகியோர் தான் என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக, சேவூர் போலீசார் வழக்குப்பதிந்து ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோரை கைது செய்தனர். கணவர் குடும்பத்தினர் ஜாமீன் கேட்டு திருப்பூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். ஜாமீன் வழங்கக் கூடாது என ரிதன்யா பெற்றோர் நீதிமன்றத்தில் இடையிட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இன்று நீதிமன்றத்தில் இருதரப்பு வாதம் நடைபெற்ற நிலையில் கணவர் குடும்பத்தாரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவியின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

The post அவிநாசி ரிதன்யா தற்கொலை வழக்கில் கணவர் குடும்பத்தினர் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் ராஜினாமா!
  • “கேரளாவின் சமூக பொருளாதார வளர்ச்சியில் அச்சுதானந்தனின் பங்கு மகத்தானது” – பெ.சண்முகம் புகழஞ்சலி
  • “முதல்வர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார்” – அமைச்சர் துரைமுருகன் தகவல்
  • கீழடி அகழாய்வில் திருத்தப்பட்ட அறிக்கை ஏதும் கோரப்படவில்லை: மத்திய அரசு
  • விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை ஜூலை 26-ல் பிரதமர் திறந்து வைக்கிறார்!
  • நரேந்திர மோதிக்கு 1,000 கிலோ மாம்பழத்தை வங்கதேசம் அனுப்பியது ஏன்?

You Might Also Like

மதுரை மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு

July 7, 2025

ஹைட்ரஜன் எரிசக்தி கண்டிப்பாக வந்தே தீரும்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உறுதி

July 8, 2025

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பெறப்படும் :அமுதா ஐ.ஏ.எஸ் விளக்கம்

July 14, 2025

புதுச்சேரியில் புதிய அமைச்சராக ஜான்குமார் வருகிற 14ம்தேதி பதவியேற்கிறார்: 3 நியமன எம்எல்ஏக்களும் ெபாறுப்பேற்பு

July 12, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?