
சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆர்.வேல் ராஜ் மீது எடுக்கப்பட்ட சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்து ஆளுநர் பிறப்பித்த உத்தரவை நிராகரிக்க பல்கலைக்கழக சிண்டிகேட் பரிந்துரை செய்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் ஆர்.வேல்ராஜ் பணியாற்றிய காலத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், அவரது பதவிக்காலம் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி முடிவடைய இருந்த நேரத்தில் ஒரு நாளுக்கு முன்பாக தமிழக அரசு அவரை சஸ்பெண்ட் செய்தது.

