
எஸ்.ஐ.ஆர் படிவத்தில் நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன. அவற்றை தேர்தல் அதிகாரிகள் தான் சரி செய்ய வேண்டும் என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதில் என்ன தவறு. என்னுடைய வாழ்க்கையை நான் வாழ்கிறேன். நான் மண்ணைச் சாப்பிட முடியுமா? நான் தொழில் செய்கிறேன். நான் யாரையும் மிரட்டி பணம் பறிக்கவில்லை. என்னுடைய விவசாய தொழிலை நான் செய்கிறேன். நான் அரசியலும் செய்கிறேன்.

