
சென்னை: சென்னையில் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.95 ஆயிரத்தை நெருங்கியது. பவுனுக்கு ரூ.1,960 அதிகரித்து, ரூ.94,600-க்கு விற்பனை செய்யப்பட்டு, புதிய உச்சத்தை தொட்டது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுவது வழக்கம். ஆனால், கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து பெரும்பாலான நாட்களில் தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.92,640 ஆக இருந்தது. இதன்தொடர்ச்சியாக, நேற்று பவுனுக்கு ரூ.1,960 உயர்ந்து, ரூ.94,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.245 உயர்ந்து, ரூ.11,825 ஆக இருந்தது. 24 காரட் தங்கம் பவுன் ரூ.1,03,200 ஆக இருந்தது. இதன்மூலம், வரலாறு காணாத புதிய விலை உச்சத்தை தொட்டது.

