புதுடெல்லி: "மகா கும்பமேளா நிறைவடைந்தது. ஒற்றுமையின் மகா யாகம் நிறைவடைந்தது. மகா கும்பமேளாவில், 140 கோடி இந்தியர்களின் நம்பிக்கை ஒரே நேரத்தில் ஒன்றுகூடிய விதம் மிகப்பெரியது" என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற மகா கும்பமேளா நேற்றுடன் (பிப். 26) நிறைவடைந்தது. இந்நிலையில், இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில், "மகா கும்பமேளா நிறைவடைந்தது. ஒற்றுமையின் மகா யாகம் நிறைவடைந்தது. பிரயாக்ராஜில் 45 நாட்கள் நடைபெற்ற ஒற்றுமை மகா கும்பமேளாவில், 140 கோடி இந்தியர்களின் நம்பிக்கை ஒரே நேரத்தில் ஒன்றுகூடிய விதம் மிகப்பெரியது! மகா கும்பாபிஷேகம் முடிந்த பிறகு என் மனதில் தோன்றிய எண்ணங்களை எழுத முயற்சித்தேன்.