கடந்த சில தினங்களாக சமூ கவலைதளங்கள் முழுவதும் 'கயாடு லோகர்' ஃபீவர்தான். அண்மையில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்தான் கயாடு லோகர்.
அசாம் மாநிலம் திஸ்பூரை பூர்விகமாக கொண்டவர். வளர்ந்தது படித்தது எல்லாம் மும்பையில்தான். 2000-ல் பிறந்த கயாடு, திரை உலகில் 2021-ல் கன்னட திரைப்படமான 'Mugilpete'-வில் அறிமுகமானார். தொடர்ந்து மலையாளத்தில் 'பத்தொன்பதாம் நூற்றாண்டு', தெலுங்கில் 'அல்லுரி', மராத்தியில் 'I Prem U' உள்ளிட்ட படங்களை முடித்துவிட்டு கோலிவுட்டில் நுழைந்திருக்கிறார். டிராகன் படத்தை தொடர்ந்து, அதர்வா உடன் கயாடு லோகர் நடித்துள்ள 'இதயம் முரளி' திரைப்படம் வெளிவரவுள்ளது.