Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அடுத்த ஓராண்டில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அடுத்த ஓராண்டில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

EDITOR

சென்னை: சென்னை மாநகருக்கு கடந்த காலங்களை விட கூடுதலாகவும், தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அடுத்த ஓராண்டில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கே.என்.நேரு பேட்டியளித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில், 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட மீஞ்சூர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைந்துள்ளது. படிப்படியாக உற்பத்தி குறைந்து நாளொன்றுக்கு 30மில்லியன் லிட்டர் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த ஆலையில் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிப்பதால் மீண்டும் இந்த ஆலையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என இதன் ஊழியர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த நிலையில் நகராட்சி மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் இந்த ஆலையில் ஆய்வு மேற்கொண்டார். உற்பத்தி நிறுத்தப்பட்டதால் முற்றிலுமாக துருப்பிடித்த நிலையில் இயந்திரங்கள் இருப்பதைக் கண்டு அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். கடந்த சில மாதங்களாக உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த ஆலையில் மீண்டும் உற்பத்தியை தொடங்குவதன் சாத்தியக்கூறுகள் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் தொடர்பாக குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் அமைச்சர் நேரு ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ஒப்பந்ததாரரின் அலட்சியம் காரணமாக ஆலை தற்போது பயன்பாடின்றி கிடப்பதாகவும், ஊழியர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும், ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட வேண்டிய பணத்தை பிடித்தம் செய்து ஊழியர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் இந்த ஆலையில் மீண்டும் உற்பத்தியை தொடங்குவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு முதலமைச்சரின் ஒப்புதலை பெற்று ஆலை பயன்பாட்டிற்கு கொண்டு வர விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஆலை அடுத்த ஓராண்டில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது சென்னை மாநகருக்கு 2021இல் நாளொன்றிற்கு 900 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 1100 மில்லியன் லிட்டர் குடிநீர் தடையின்றி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்தார். சென்னை மாநகருக்கு எந்த பாதிப்புமின்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும், செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக சென்னைக்கு குடிநீர் வினியோகம் செய்ய குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன எனவும் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது அமைச்சர் நாசர், மாவட்ட ஆட்சியர் பிரதாப், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் வினய் உட்பட குடிநீர் வாரிய அதிகாரிகள் பலர் இருந்தனர். முன்னதாக அமைச்சர் நேரு ஆய்விற்கு வந்த போது வாயிலில் காத்திருந்த தொழிலாளர்களை அழைத்து கையில் என்ன மனு கொடுங்கள் என கேட்டு வாங்கி கொண்டார். காட்டுப்பள்ளி கடல்நீரை குடிநீராக்கும் ஆலையை மீண்டும் திறந்து தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கிட வலியுறுத்தி அவரிடம் அப்போது மனு அளித்தனர்.

The post காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அடுத்த ஓராண்டில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
  • பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை; 4 பேருக்கு ஆயுள் தண்டனை
  • வளர்ச்சி அடைந்த பிஹாரை உருவாக்க மத்திய அரசு தீவிரம்: பிரதமர் மோடி உறுதி
  • பாகிஸ்தானை சேர்ந்த டிஆர்எப் உலகளாவிய தீவிரவாத அமைப்பு – அமெரிக்கா அறிவிப்பு; இந்தியா வரவேற்பு
  • ஹைதராபாத் கார் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
  • பரஸ்பர நலன், சர்வதேச விவகாரங்களில் ரஷ்யா, இந்தியா, சீனா மீண்டும் இணைந்து செயல்பட முடிவு

You Might Also Like

எம்.பி.பி.எஸ். படிப்புக்கான ஆண்டு கல்விக்கட்டணம் ரூ.30 லட்சமாக உயர்வு

July 18, 2025

மூட்டு வாத பாதிப்புக்கு நறுமண சிகிச்சை: யோகா இயற்கை மருத்துவ கல்லூரி தகவல்

July 2, 2025

யூடியூபர் மீது வரதட்சணை புகார்: வழக்குப் பதிவு

July 5, 2025

இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் திட்டம்: இயல் இசை நாடக மன்றம் அறிவிப்பு

July 9, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?