லக்னோ: குடிபோதையில் மணமகளுக்குப் பதிலாக மணமகளின் தோழனுக்கு மாலையை மணமகன் அணிவித்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் அண்மையில் நடைபெற்ற திருமணம் தொடர்பான வீடியோ யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உ.பி. மாநிலம் கியோல்டியா போலீஸ் நிலையத்துக்குட்பட்ட நவ்க்வா பகவந்த்பூர் பகுதியில் இந்த திருமணம் கடந்த 22-ம் தேதி நடந்துள்ளது. சமூக வலைதளங்களில் வெளியான அந்த வீடியோவில், திருமணத்தின்போது மேடையில் மணமகள் ராதா அமர்ந்திருக்க, மணமகன் ரவீந்திரகுமார் (26) தள்ளாடியபடி மேடைக்கு வருகிறார். இதனால் ராதாவின் குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது, குடிபோதையில் இருந்த அந்த மணமகன் ரவீந்திரகுமார், மணப்பெண் ராதாவுக்கு மாலை அணிவிப்பதற்கு பதிலாக, பக்கத்தில் இருந்த மணமகளின் நண்பருக்கு மாலையை அணிவித்தார்.