சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படத்தை மலையாளத்தில் கவனம் ஈர்த்த ‘2018’ இயக்குநர் ஜூடு ஆண்டனி ஜோசப் இயக்கவுள்ளார். மலையாளம் மட்டுமன்றி அனைத்து மொழிகளில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘2018’.
இதன் இயக்குநர் ஜூடு ஆண்டனி ஜோசப் அடுத்ததாக லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமானார். அதனைத் தொடர்ந்து பல்வேறு நாயகர்கள் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியானாலும், எதுவுமே ஒப்பந்தம் ஆகாமல் இருந்தது.