புதுடெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் சனிக்கிழமை (ஜன. 11) காலை அடர்த்தியான மூடுபனி நிலவியதன் காரணமாக ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், 45 ரயில்கள் தாமதமானதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வட இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. குளிர்காலம் என்பதால் இமயமலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது. வட மாவட்டங்கள் பலவற்றிலும் குளிர் அதிகரித்து காணப்படுகிறது.