சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 1,996 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி பணி இடங்களுக்கு இன்று முதல் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வரை விண்ணப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை -1 ஆகிய பணியிடங்களுக்கான அறிவிக்கை எண்.02 / 2025. ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் Website: https://www.trb.tn.gov.in வாயிலாக இன்று ( 10.07.2025 ) வெளியிடப்படுகிறது. பாடவாரியான காலிப் பணியிட விவரங்கள் கல்வித் தகுதி, வயது மற்றும் விண்ணப்பம் செய்வதற்கான அனைத்து விவரங்களும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் , விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக (Online Application) விண்ணப்பிக்க ஏதுவாக 10.07.2025 முதல் ஆகஸ்ட் 12 பிற்பகல் 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது . எனவே, விண்ணப்பத்தாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும்போது உரிய விவரங்களை சரிபார்த்து அதன் பின்னர் விண்ணப்பிக்க வேண்டும். அறிவிக்கை தொடர்பான கோரிக்கை மனுக்கள் trbgrievances@tngov.in என்ற மின்னஞ்சல் வாயிலாக மட்டுமே அனுப்ப வேண்டும். இதர வழியில் அனுப்பும் கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்படமாட்டாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழகத்தில் முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு! appeared first on Dinakaran.