
சென்னை: தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 3,665 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வில் 1.96 லட்சம் பேர் பங்கேற்றனர்.
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 2,837 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள்,சிறைத்துறையில் 180 காலி பணியிடங்கள், தீயணைப்பு துறையில் 631 பணியிடங்கள் உள்பட மொத்தம் 3,665 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் ஆக.21-ல் வெளியிட்டது.

