Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: தென்மேற்கு பருவமழையால் நீர் நிரம்பி காணப்படும் ஆழியார், பரம்பிக்குளம் அணை: விவசாயிகள் மகிழ்ச்சி
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

தென்மேற்கு பருவமழையால் நீர் நிரம்பி காணப்படும் ஆழியார், பரம்பிக்குளம் அணை: விவசாயிகள் மகிழ்ச்சி

EDITOR

பொள்ளாச்சி: தென்மேற்கு பருவமழையால், ஆழியார், பரம்பிக்குளம் அணைகளில் தொடர்ந்து நீர் நிரம்பி உள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை பல நாட்கள் பெய்தது. இதனால், பிஏபி திட்டத்திற்குட்பட்ட சோலையார் மற்றும் ஆழியார், அணைகள் அடுத்தடுத்து விரைந்து முழு அடியை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து உபரிநீர் அவ்வப்போது வெளியேற்றப்பட்டது. தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை சற்று குறைந்து உள்ளது. இருந்தாலும், அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து உள்ளது. இதில், மொத்தம் 120 அடி கொண்ட ஆழியார் அணையின் நீர்மட்டம் தற்போது 118.40 அடியாக உள்ளது.

அப்பர் ஆழியார் அணையிலிருந்தும் தண்ணீர் திறப்பால், ஆழியார் அணைக்கு வினாடிக்கு 550 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல், டாப்சிலிப்பை அடுத்து மொத்தம் 72 அடி கொண்ட பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 68 அடியாக உள்ளது. வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. ஆழியார் மற்றும் பரம்பிக்குளம் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து முழு நீர்மட்டத்தை எட்டியவாறு இருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post தென்மேற்கு பருவமழையால் நீர் நிரம்பி காணப்படும் ஆழியார், பரம்பிக்குளம் அணை: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • அரசு சார்பில் சென்னை இதழியல் நிறுவனம் தொடக்கம்: நிர்வாக குழு தலைவராக ‘இந்து’ என்.ரவி நியமனம்
  • காமராஜர் குறித்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது: செல்வப்பெருந்தகை விளக்கம்
  • மின்வாரிய ஊழியர் ஊதிய உயர்வு குறித்து 24-ல் பேச்சுவார்த்தை
  • நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
  • பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை; 4 பேருக்கு ஆயுள் தண்டனை
  • வளர்ச்சி அடைந்த பிஹாரை உருவாக்க மத்திய அரசு தீவிரம்: பிரதமர் மோடி உறுதி

You Might Also Like

சென்னை உள்பட 10 மாவட்டங்களில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடக்கம்: 70 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்கட்டமாக விநியோகம்

July 1, 2025

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டு வரும் இராஜாதோட்டம் மற்றும் பி.ஆர்.என்.கார்டன் திட்டப்பகுதிகளின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் சேகர் பாபு

June 19, 2025

சதுரகிரி கோயிலில் ஆனி மாத பிரதோஷ வழிபாடு: பக்தர்கள் தரிசனம்

July 8, 2025

பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண் முன் அவரது அந்தரங்க வீடியோவை பார்க்கலாமா? ஆண் காவலர்களுக்கு ஐகோர்ட் கண்டனம்

July 15, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?