
மைசூரு: டெல்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பு குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கோரிக்கை வைத்தார். மேலும், தேர்தல்களின் போது குண்டுவெடிப்புகள் ஏன் நிகழ்கின்றன என்றும் கேள்வியெழுப்பினார்.
மாவட்ட அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு மைசூருவில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, “பிஹார் தேர்தல் நடைபெற்ற நிலையில், இந்த குண்டுவெடிப்பு நடந்தது மிகவும் கவலையளிக்கிறது. தேர்தல்களின் போது குண்டுவெடிப்புகள் ஏன் நிகழ்கின்றன?. மத்திய அரசு இந்த கேள்வி குறித்து விசாரித்து பதிலளிக்க வேண்டும்.

