Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 6 பேரின் சிறுநீரகம் விற்கப்பட்டது: விசாரணையில் அம்பலம்
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 6 பேரின் சிறுநீரகம் விற்கப்பட்டது: விசாரணையில் அம்பலம்

EDITOR

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 6 பேரின் சிறுநீரகம் விற்கப்பட்டது விசாரணையில் அம்பலமானது. ஆறு நபர்களில் ஐந்து நபர்கள் போலியான முகவரியைப் பயன்படுத்தி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கிட்னி திருட்டு கும்பலே போலி சான்றிதழ்களை தயாரித்து கொடுத்துள்ளது. சிறுநீரகம் தானமாக பெற்றவரின் உறவினர் என இந்த சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. வீடியோ வெளியிட்ட பெண்ணிடம் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் விசாரணை நடத்தி வருகிறார்.

நாமக்கல் அருகே கிட்னி திருடப்பட்ட விவகாரத்தில் நடந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப்பகுதியில் ஏழைகளை குறி வைத்து கிட்னி பறிப்பு குற்றங்கள் அதிக அளவில் நடைபெறுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்திய நிலையில், தலைமறைவான இடைத்தரகர் ஆனந்தன் மீது பள்ளிபாளையம் காவல்நிலையத்தில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இவ்விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம், சென்னை சுகாதாரத்துறை சட்டப்பிரிவு இணை இயக்குநர் மீனாட்சி சுந்தரம் தலைமையிலான சிறப்பு குழு ரகசிய விசாரணை நடத்தி, வீடியோ மூலம் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.

கிட்னி விற்பனை செய்யலாம் என அணுகியது யார்? எங்கு வைத்து பேரம் பேசப்பட்டது? உள்ளிட்ட கேள்விகளை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக இதுவரை எந்த மருத்துவமனையிலும் விசாரணை தொடங்கவில்லை என்றும், எந்த மருத்துவமனைக்கும் நோட்டீஸ் கொடுக்கவில்லை என்றும் மருத்துவத்துறை சிறப்புக் குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்நிலையில், சிறுநீரகம் திருட்டு குறித்து, தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சுகாதார திட்ட இயக்குநர் எஸ்.வினீத் இதுகுறித்து விரிவாக விசாரித்து இரண்டு வாரங்களில் அரசுக்கு அறிக்கை அளிக்குமாறு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நடைபெற்று வரும் விசாரணையில் கிட்னி விற்பனை பணம் பெற்றுக் கொண்டு விற்பனை நடந்ததை விசாரணை குழு உறுதி செய்தது.

The post நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 6 பேரின் சிறுநீரகம் விற்கப்பட்டது: விசாரணையில் அம்பலம் appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • தமிழகத்தில் பகல் 1 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • ஜெய்சங்கரின் சீன பயணம் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவுக்கு சொல்லும் சேதி என்ன?
  • பன் பட்டர் ஜாம்: திரை விமர்சனம்
  • ‘கவனிப்பு’ பிரச்சினையால் களேபரமான திருப்பத்தூர் நகர்மன்றம்! – திமுக சேர்மனுக்கு திருகுவலியை உண்டாக்கும் திமுக கவுன்சிலர்கள்
  • அதிமுக எம்எல்ஏ தலைமையில் வீடு வீடாக துண்டு பிரசுரம் வழங்கல்
  • இமாச்சலில் மழை, வெள்ளத்துக்கு இதுவரை 116 பேர் உயிரிழப்பு: ரூ.1,230 கோடிக்கு சேதம்

You Might Also Like

தாம்பரத்தில் இருந்து புறப்பட இருந்த MEMU ரயில் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

June 24, 2025

மடப்புரம் கோயில் காவலாளி மரண வழக்கு 5 பேரிடம் 8 மணிநேரம் சிபிஐ தீவிர விசாரணை

July 18, 2025

சீர்மரபினர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு சீர்மரபினர் நல அடையாள அட்டைகள், நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்கள்

June 23, 2025

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு

July 13, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?