Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: நெல்லை மாவட்டம் ராமையன்பட்டி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து!
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

நெல்லை மாவட்டம் ராமையன்பட்டி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து!

EDITOR

நெல்லை: நெல்லை மாவட்டம் ராமையன்பட்டி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து ஏற்பட்டுள்ள இடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

நெல்லை மாநகராட்சியில் 50க்கும் மேலான வார்டுகள் உள்ளன. இங்கு தினமும் டன் கணக்கில் பொதுமக்கள் பயன்டுத்தக்கூடிய குப்பைகள் தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து குப்பைகள் லாரிகள் மூலமாக மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள நெல்லை – ராமையன்பட்டி பகுதியில் உள்ள 100 ஏக்கர் பரப்பளவில் குப்பை கிடங்குகள் சேகரித்து வைக்கப்படுகின்றன. இந்த குப்பை கிடங்கு மாலை 4 மணியளவில் திடீரென தீ பிடித்து எரிய தொடங்கியது.

இதனால் ராமையன்பட்டி, நெல்லை மாநகர பகுதி சுற்றுவட்டார பகுதிகள் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது. இதன் காரணமாக தச்சைநல்லூர், ராமையன்பட்டி சுற்றுவட்டார தவித்து வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த நெல்லை பாளையங்கோட்டை கங்கை கொண்டான் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பல ஏக்கர்களில் தேக்கி வைக்கப்பட்டுள்ள குப்பைகளில் பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இருந்தபோதிலும் காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டதால் தீ கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் தீ வேகமாக அருகில் உள்ள குப்பைகளில் பரவி அந்த இடமே புகை மண்டலமாக காணப்பட்டது. தகவலறிந்த நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டார்.

The post நெல்லை மாவட்டம் ராமையன்பட்டி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து! appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • ‘எனது வளர்ச்சியை தன் வளர்ச்சியாகக் கருதியவர்’ – மு.க.முத்து மறைவுக்கு முதல்வர் புகழஞ்சலி
  • தாவரங்களின் ரகசிய ஒலிக்கு பதில் தரும் விலங்குகள் – ஆய்வில் புதிய தகவல்
  • எடப்பாடி அழைப்பை முற்றாக நிராகரிக்கிறோம்; சிவப்பு கம்பள வரவேற்பு அல்ல, ரத்த கம்பள வரவேற்பு: முத்தரசன் பேட்டி
  • அவரும் நானும்-பாகம் 2 நூல் வெளியீடு ஒத்திவைப்பு.!!
  • மு.க.முத்து மறைவுக்கு அன்புமணி இரங்கல்..!!
  • பாஜகவின் தலையாட்டி பொம்மையாக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார்: பெ.சண்முகம்

You Might Also Like

கன்னியாகுமரியில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் உயிரிழப்பு: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

July 5, 2025

கார் ஏற்றி கொல்ல முயன்றதாக பொய் சொன்ன வழக்கு மதுரை ஆதீனம் 5ம் தேதி ஆஜராக 2வது முறையாக சம்மன்: ஆஜராகாதபட்சத்தில் கைது செய்யப்படலாம் என தகவல்

July 2, 2025

வாணியம்பாடி தனியார் பல் மருத்துவமனையில் தொற்றால் 8 பேர் இறந்த விவகாரத்தில் மருத்துவ குழு ஆய்வு..!!

July 15, 2025

வார விடுமுறையை முன்னிட்டு ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்: ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ச்சி

July 6, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?