பஹல்காமில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு தக்க பதிலடி கொடுப்பதற்காக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இது, நியாயமான கோபத்தின் வெளிப்பாடு.
இந்தியாவின் தாக்குதலுக்கு எதிரொலியாக, உள்நாட்டு அரசியலைச் சமாளிப்பதற்காக, பெயரளவுக்கு கண்டனம் தெரிவித்து அமைதி காத்திருந்தால் பாகிஸ்தான் தப்பியிருக்கும். ஆனால், பதில் தாக்குதல் நடத்தி தவறுசெய்துவிட்டது. அதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. போர் மேகமும் இருநாடுகளிடையே வலுவடைந்துள்ளது.