Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: பருத்திக்கு கிலோ ரூ. 100 குவிண்டாலுக்கு ரூ. 10,000 வழங்க ஒன்றிய, மாநில அரசுகளுக்கு பருத்தி விவசாயிகள் கோரிக்கை!!
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

பருத்திக்கு கிலோ ரூ. 100 குவிண்டாலுக்கு ரூ. 10,000 வழங்க ஒன்றிய, மாநில அரசுகளுக்கு பருத்தி விவசாயிகள் கோரிக்கை!!

EDITOR

தருமபுரி : பருத்தி கிலோ ஒன்றுக்கு 100 ரூபாய்க்கும் குவிண்டாலுக்கு 10,000 ரூபாயும் விலை கிடைத்திட ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரூர் பகுதி பருத்தி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் அரூர், ஓரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் பரவலாக பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். திங்கள்கிழமைகளில் அரூர் வேளாண்மை உற்பத்தி கூட்டுறவு சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெறும். 1 கிலோ பருத்தி 60 முதல் 70 ரூபாய் வரையிலும், குவிண்டாலுக்கு ரூ. 6000 முதல் ரூ. 7,000 வரையிலும் விற்பனையாகிறது.

ஆனால் விவசாயிகள் பருத்தி பயிரிட உளவு, நடவு, களை எடுப்பு , மருந்து அடிப்பது, அறுவடை என ஒரு ஏக்கருக்கு 25,000 முதல் 30,000 வரை செலவாகிறது. எனவே தற்போதைய பருத்தி விலை கட்டுப்படி ஆகவில்லை என்று பருத்தி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே ஒன்றிய அரசும் மாநில அரசும் பருத்திக்கு குறைந்த பட்சமாக பருத்தி 1 கிலோவுக்கு 100 ரூபாயும் குவிண்டாலுக்கு 10000 ரூபாயும் விலை நிர்ணயிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். பருத்தி பயிரிடுவதை தங்களது வாழ்வாதாரமாக கொண்டுள்ள அரூர் பகுதி விவசாயிகளின் கோரிக்கைக்கு ஒன்றிய அரசும் மாநில அரசும் செவி சாய்க்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்.

The post பருத்திக்கு கிலோ ரூ. 100 குவிண்டாலுக்கு ரூ. 10,000 வழங்க ஒன்றிய, மாநில அரசுகளுக்கு பருத்தி விவசாயிகள் கோரிக்கை!! appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
  • பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை; 4 பேருக்கு ஆயுள் தண்டனை
  • வளர்ச்சி அடைந்த பிஹாரை உருவாக்க மத்திய அரசு தீவிரம்: பிரதமர் மோடி உறுதி
  • பாகிஸ்தானை சேர்ந்த டிஆர்எப் உலகளாவிய தீவிரவாத அமைப்பு – அமெரிக்கா அறிவிப்பு; இந்தியா வரவேற்பு
  • ஹைதராபாத் கார் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
  • பரஸ்பர நலன், சர்வதேச விவகாரங்களில் ரஷ்யா, இந்தியா, சீனா மீண்டும் இணைந்து செயல்பட முடிவு

You Might Also Like

30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதிகள் தமிழ்நாடு காவல் துறையினரால் கைது

July 1, 2025

பழங்குடியின பெண்களை வரி செலுத்துவோர்களாக உயர்த்திய ஈஷா; வளர்ந்த பாரதத்திற்கு வழிவகுக்கும் முன்னெடுப்பு: பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் பாராட்டு

July 5, 2025

நீலகிரி, தென்காசி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

July 7, 2025

குளித்தலை பஸ்நிலையம் அருகே தடுப்புசுவர் இல்லாத வாய்க்கால் பாலத்தில் ஆபத்தான பயணம்

July 14, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?