
பெர்த்: ஆஸ்திரேலிய அணி உடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியை ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளில் வீழ்த்தியது. இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்தது.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி ஞாயிற்றுக்கிழமை அன்று பெர்த் நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச முடிவு செய்தது.

