Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: பவுர்ணமியையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே 90 அடி உள்வாங்கிய கடல்: வெளியே தெரிந்த பாசி படர்ந்த பாறைகள்
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

பவுர்ணமியையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே 90 அடி உள்வாங்கிய கடல்: வெளியே தெரிந்த பாசி படர்ந்த பாறைகள்

EDITOR

திருச்செந்தூர்: பவுர்ணமியையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே இன்று கடல் சுமார் 90 அடி உள்வாங்கியதால் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அழகிய கடற்கரையோரம் அமைந்துள்ளது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடுவதை பெரும் பாக்கியமாக கருதுகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் அதிகாலை முதல் இரவு வரை உற்சாகமாக நீராடி மகிழ்கின்றனர்.

இங்கு தமிழ் மாதங்களில் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களிலும், அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய நாட்களிலும் கடல் உள்வாங்குவதும், இயல்பு நிலைக்கு திரும்புவதும் வாடிக்கையாகி விட்டது. இதேபோல இன்று அதிகாலை 2.35 மணி முதல் நாளை அதிகாலை 3.11 மணி வரை பவுர்ணமி உள்ளது. இதன் காரணமாக கோயில் கடற்கரையில் அய்யா கோயில் அருகே இன்று காலை சுமார் 90 அடி தூரம் கடல் உள்வாங்கி பச்சைப் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது. இருந்தபோதிலும் பக்தர்கள் எவ்வித அச்சமுமின்றி வழக்கம் போல் கடலில் நீராடி மகிழ்ந்தனர்.

The post பவுர்ணமியையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே 90 அடி உள்வாங்கிய கடல்: வெளியே தெரிந்த பாசி படர்ந்த பாறைகள் appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • ‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம் வரவேற்கத்தக்கது’ – பெ.சண்முகம் ஆதரவு
  • ‘பாரதத்தின் மண்ணிலும் நீரிலும் இந்துத்துவா ஆழமாக கலந்துள்ளது’- சிவராஜ் சிங் சவுகான் கருத்து
  • அரசு உதவி வழக்கு நடத்துனர் பதவி முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட்
  • சிஎம்டிஏ உறுப்பினர் செயலருக்கு விதிக்கப்பட்ட வாரன்ட் வாபஸ்
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை சார்பில் சிறந்த எழுத்தாளர்களுக்கு ஊக்கத்தொகை: அமைச்சர் வழங்கினார்
  • என்சிஇஆர்டி பாடத்திட்டங்கள் மூலம் கல்வியை காவிமயமாக்கும் துரோகத்தை செய்வதா? ஒன்றிய அரசுக்கு திமுக மாணவர் அணி கண்டனம்

You Might Also Like

சிற்றாறு அருகே யானைகள் நுழைவதை தடுக்க கிராமத்தை சுற்றி மின்வேலி அமைக்க கோரிக்கை

July 2, 2025

தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான காற்றாலையில் தீ விபத்து!

July 17, 2025

பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகளின் அடையாளங்களை எந்த வடிவிலும் வெளிப்படுத்தக் கூடாது: ஐகோர்ட் அதிரடி

June 20, 2025

இரு சமூகங்களுக்கிடையே மோதல் புகார் மீண்டும் ஆஜராகாத மதுரை ஆதீனம்: வயதாகிவிட்டதால் காணொலி மூலம் ஆஜராவதாக கோரிக்கை

July 5, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?