சென்னை: தமிழகத்தில் பாலியல் குற்றமே நடக்கவில்லை என்று கணக்கு காட்டுவதற்காக, கல்லூரிகளில் உள்ளக புகார் குழுக்களையே அமைக்காமல் திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளதா என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்த அவரின் வலைதள பதிவு: தமிழகத்தில் 180 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இதில் 46 கல்லூரிகளில் பாலியல் புகார்களை தெரிவிக்கும் உள்ளக புகார் குழுக்கள் இல்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. இது அதிர்ச்சி அளிக்கிறது. அதிலும், தங்கள் கல்லூரியில் இந்த குழு இருக்கிறதா, இல்லையா என்பதை தெரிவிக்கவே 113 அரசு கல்லூரிகள் அலட்சியம் காட்டியுள்ளன.