சென்னை: புதிதாக பெயர் சூட்டப்பட்ட பேராயர் எஸ்றா சற்குணம் சாலை பெயர் பலகையினை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவராக திறம்பட பணியாற்றி; தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உரிமை குரல் எழுப்பிய பேராயர் எஸ்றா சற்குணம் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதனை அடுத்து, பெருநகர சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலம், வார்டு-100, கீழ்ப்பாக்கம் பகுதியில், புதிதாக பெயர் சூட்டப்பட்ட பேராயர் எஸ்றா சற்குணம் சாலை பெயர் பலகையினை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இணைந்து இன்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் சென்னை மாநகர மேயர் ஆர். பிரியா , மதிப்பிற்குரிய துணை மேயர் மு.மகேஷ் குமார் , மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., , துணை ஆணையாளர் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூர்த்தி, இ.ஆ.ப., , நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு , மண்டலக்குழுத் தலைவர் கூ.பி.ஜெயின் , சட்டமன்ற உறுப்பினர் எஸ். இனிகோ இருதயராஜ் , மாமன்ற உறுப்பினர். வசந்தி பரமசிவம் ஆகியோருடன் அரசு அலுவலர்கள் மற்றும் எஸ்றா சற்குணம் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
The post புதிதாக பெயர் சூட்டப்பட்ட பேராயர் எஸ்றா சற்குணம் சாலை பெயர் பலகையினை திறந்து வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு! appeared first on Dinakaran.