தமிழக சட்டம்- ஒழுங்கு நிலவரம் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் டிஜிபி சங்கர் ஜிவால் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, பாலியல், போதைப் பொருள் உட்பட பல்வேறு வகையான குற்றச்செயல்களை முற்றிலும் தடுக்க டிஜிபி சங்கர் ஜிவால் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒருபகுதியாக மண்டல ஐஜிக்கள், மாநகர் – பெருநகர் காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்பிக்களுக்கு அவ்வப்போது தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அவர்களின் செயல்பாடுகளை நேரடியாகவும், உளவுத்துறை மூலமும் கண்காணித்து தேவையான உத்தரவுகளை பிறப்பிக்கிறார். உத்தரவுகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இல்லாமல் சூழ்நிலைக்கு தகுந்தவாறு சட்டத்துக்கு உட்பட்டு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.