பிரயாக்ராஜ்: உலகின் மிக பெரிய ஆன்மிகம், கலாச்சாரம் நிகழ்வாக கருதப்படுவது மகா கும்பமேளா நிகழ்ச்சியாகும். 12 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த மகா கும்பமேளா வரும் 13-ம் தேதி உத்தரபிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரில் தொடங்கவுள்ளது.
இந்த மகா கும்பமேளா விழா, வரும் பிப்ரவரி 26-ம் தேதி வரை கோலாகலமாக நடைபெறும். 45 நாட்கள் நடைபெறும் இந்த மகா கும்பமேளா மகா சிவராத்திரியுடன் கோலாகலமாக நிறைவுபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.