Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: மின் இணைப்பு வசதி இல்லாததால் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படிக்கும் மாணவர்கள்
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

மின் இணைப்பு வசதி இல்லாததால் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படிக்கும் மாணவர்கள்

EDITOR

ராமநாதபுரம்: வாலிநோக்கம் அருகே குடிசைகளில் மின் இணைப்பு வசதி இல்லாததால் மாணவர்கள் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படிக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஒன்றியம், வாலிநோக்கம் பஞ்சாயத்து, சாத்தையாகோவில் குக்கிராமத்தில் மீனவர்கள், கூலி தொழிலாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர் சுமார் 100 வீடுகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 4 தலைமுறையாக அரசு நிலத்தில் குடிசை வீடுகளில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இங்குள்ள குடியிருப்புகளில் மின் இணைப்பு வசதி இல்லை. இதனால் மாணவர்கள் இரவில் குடிசைகளில் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் பாடங்களை படித்து வருகின்றனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது: எங்களது குழந்தைகள் நல்ல முறையில் கல்வி கற்க வேண்டும். இதற்காக எங்களுக்கு வீட்டுமனை பட்டா, மின் இணைப்பு வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து கடலாடி வருவாய்த்துறையினர் கூறுகையில், `வாலிநோக்கம் சாத்தையா கோவில் பகுதியில் குடிசைகளில் வசித்து வந்தவர்களுக்கு அருகே அரசு சார்பில் அனைத்து வசதிகளுடன் சுனாமி வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது. இருப்பினும் அதே குடிசைகளில் வசித்து வருகின்றனர். பட்டா கேட்டு வருகின்றனர். இந்த பகுதி அரசு வருவாய்த்துறை கணக்கில் சாத்தார்கோவில் வட்ட கிணறு என தாக்கலாகி வருவதால் தனி நபர்களுக்கு பட்டா, மின் இணைப்பு வழங்குவதில் நிர்வாக சிக்கல் உள்ளது என்று தெரிவித்தனர்.

The post மின் இணைப்பு வசதி இல்லாததால் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படிக்கும் மாணவர்கள் appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • அரசு சார்பில் சென்னை இதழியல் நிறுவனம் தொடக்கம்: நிர்வாக குழு தலைவராக ‘இந்து’ என்.ரவி நியமனம்
  • காமராஜர் குறித்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது: செல்வப்பெருந்தகை விளக்கம்
  • மின்வாரிய ஊழியர் ஊதிய உயர்வு குறித்து 24-ல் பேச்சுவார்த்தை
  • நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
  • பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை; 4 பேருக்கு ஆயுள் தண்டனை
  • வளர்ச்சி அடைந்த பிஹாரை உருவாக்க மத்திய அரசு தீவிரம்: பிரதமர் மோடி உறுதி

You Might Also Like

கோயிலில் கண்டெடுத்த 2 ரூபாய்க்கு பதிலாக உண்டியலில் ரூ.10 ஆயிரம் செலுத்திய பக்தர்: உருக்கமான கடிதம்

July 2, 2025

தாம்பரத்தில் இருந்து புறப்பட இருந்த MEMU ரயில் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

June 24, 2025

மல்லை சத்யா எனக்கு துரோகம் செய்துவிட்டார்: வைகோ குற்றச்சாட்டால் பரபரப்பு

July 10, 2025

ஆடி மாதப்பிறப்பையொட்டி காவிரிக்கரை சோழீஸ்வரருக்கு 1008 குட தீர்த்த அபிஷேகம்

July 17, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?