
புதுடெல்லி: உலகளவில் ஏற்படும் மரணங்களில் நான்கில் 3 பங்கு நாள்பட்ட நோய்களால் ஏற்படுகிறது. இதில் பெரும்பாலானவற்றை வாழ்க்கை முறை மாற்றம், குறித்த நேரத்தில் பரிசோதனை மற்றும் சிகிச்சை, தடுப்பூசிகள் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் தடுக்க முடியும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து உலகின் முன்னணி மருத்துவ நிறுவனமான ஜிஎஸ்கே.வின் மருத்துவ இயக்குநர் மற்றும் அதிகாரிகள் கூறுகையில், ‘‘வயது வந்தவர்களுக்கு இன்பூளுயன்சா, சுவாச நோய் தொற்று (ஆர்எஸ்வி), அக்கி, அம்மை, நிமோனியா போன்ற நோய்களுக்கான தடுப்பூசிகள் உள்ளன. ஆனால், இந்த தடுப்பூசிகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகவும் குறைவு.

