
புதுடெல்லி: மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் பல பகுதிகளில் புறாக்கள் ஏராளமாக உள்ளன. இவற்றுக்கு மும்பை நகர மக்கள் தானியங்கள் அளிப்பதும் வழக்கம். ஆனால், புறாக்களால் மும்பை நகர் அசுத்தமாவதாகவும் மனிதர்களுக்கு நுரையீரல் பாதிப்பு, சுவாச நோய் பரவுவதாகவும் புகார்கள் எழுகின்றன.
இதற்கு தீர்வு காண மகாராஷ்டிர அரசு, கடந்த ஜுலை 3-ம் தேதி முதல் 51 புறா கூடுகளை அப்புறப்படுத்தியது. தாதர் உள்ளிட்ட பல முக்கியப் பகுதிகளில் இருந்த புறாக்களின் கூடுகளை பிளாஸ்டிக்கால் மும்பை நகராட்சி மூடிவிட்டது.

