நாக்பூர்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விதர்பா – கேரளா அணிகள் இன்று மோதுகின்றன.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 90-வது சீசன் இறுதிப் போட்டி நாக்பூரில் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் முன்னாள் சாம்பியனான விதர்பா, கேரளா அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. கேரளா அணி முதன்முறையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. விதர்பார் அணி கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.