
சரண்: “லாலு பிரசாத் யாதவின் காட்டாட்சியில் இருந்து பிஹாரை விடுவித்தவர் நிதிஷ் குமார்” என பிஹாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிஹாரின் சரண் மாவட்டத்தில் உள்ள சாப்ராவில், தரையா தொகுதியில் மீண்டும் போட்டியிடும் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் ஜனக் சிங், அம்னூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் கிரிஷன் குமார் மான்டூ ஆகியோரை ஆதிரித்து அமித் ஷா தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், “20 ஆண்டுகளுக்கு முன்பு லாலு பிரசாத் யாதவும், ராப்ரி தேவியும் பிஹாரில் எவ்வாறு காட்டாட்சி நடத்தினார்கள் என்பதை இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்ல சரண் மாவட்டத்தின் சாப்ராவைவிட சிறந்த நிலம் இல்லை.

