Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: வருசநாடு அருகே கிராமச்சாலை பணிக்கு பொருட்கள் தர ஆய்வு
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

வருசநாடு அருகே கிராமச்சாலை பணிக்கு பொருட்கள் தர ஆய்வு

EDITOR


வருசநாடு: வருசநாடு அருகே பொன்னன்படுகை கிராமத்திற்கு தார்ச்சாலை அமைப்பதற்கு பயன்படுத்தப்பட உள்ள ஜல்லிகற்கள் உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் தர ஆய்வு செய்தனர். வருசநாடு அருகே பொன்னன்படுகை கிராமத்திற்கு செல்லும் சுமார் 5 கிலோமீட்டர் நீளமுடைய சாலையின் இரண்டு புறமும் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் தென்னை, கொட்டை முந்திரி சாகுபடி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் அதிகம் பயன்படுத்தி வரும் பாதையில் புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பசுமலைத்தேரி முதல் பொன்னன்படுகை வரை புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

ஆனால் இதில் சில பகுதிகள் வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் தார்சாலை பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த பாதை குண்டும் குழியுமாக இருப்பதால் விவசாயிகள் விளைபொருட்களை ஏற்றிச் செல்வதற்கு சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில், பாதியில் நிறுத்தப்பட்ட பணிகள் மீண்டும் தொடரப்படவுள்ளது. இந்த நிலையில் புதிதாக அமைக்கப்படும் சாலைகள் உரிய தரத்துடன் இருப்பதை உறுதி செய்யும் வகையில், தற்போது கட்டுமானப் பொருட்களின் தரத்தை அதிகாரிகள் பரிசோதித்து பயன்படுத்த அனுமதித்து வருகின்றனர்.

அதன்படி பொன்னன்படுகை கிராமத்திற்கு சாலை அமைப்பதற்காக கொண்டு செல்லப்படும் ஜல்லி கற்கள் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் தரம் குறித்து ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது. கடமலை-மயிலை யூனியன் பொறியாளர் துறை சார்பில் பொறியாளர் கார்த்திக் உள்ளிட்டோர் தர ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.

The post வருசநாடு அருகே கிராமச்சாலை பணிக்கு பொருட்கள் தர ஆய்வு appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • “ஆட்சியில் பங்கு என்பது காங்கிரசுக்கும் ஆசை உண்டு” – கார்த்தி சிதம்பரம் எம்.பி
  • மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் போலீஸார் விசாரணை – பாஜக கண்டனம்
  • கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு குறித்து விரைவில் தேசிய கருத்தரங்குகள்: தங்கம் தென்னரசு
  • ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை – அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் மக்கள் அதிர்ச்சி
  • ஊட்டி அருகே பாலத்தில் நடந்து சென்ற சிறுத்தை – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
  • மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 3 நாள் மழைக்கு வாய்ப்பு: நீலகிரி, கோவை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்

You Might Also Like

கர்ப்பிணி தாய்மார்கள் 75 சதவீதம் பேர் ‘யூ-வின்’ செயலியில் பதிவு: சுகாதாரத்துறை தகவல்

June 22, 2025

களக்காடு சூழல் சுற்றுலா – நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி

June 20, 2025

விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு வழங்கும் வேளாண் ஊக்க மானியத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்த வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

July 19, 2025

தமிழ்நாடு அரசு அறிவிப்பு: 2026ல் ஹஜ் பயணத்திற்கு 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

July 8, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?