Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: வேளச்சேரியில் இருந்து பரங்கிமலைக்கு பறக்கும் ரயில் சேவை நவம்பரில் துவங்கும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் உறுதி
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

வேளச்சேரியில் இருந்து பரங்கிமலைக்கு பறக்கும் ரயில் சேவை நவம்பரில் துவங்கும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் உறுதி

EDITOR

ஆலந்தூர்: ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆலந்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர் பகுதி மக்களின் குறை தீர்க்கும் முகாம் நேற்று நங்கநல்லூரில் நடைபெற்றது. ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன் தலைமை தாங்கினார். வருவாய் கோட்டாட்சியர் ரங்கராஜன், மண்டல உதவி கமிஷனர் முருகதாஸ், செயற்பொறியாளர் ரவிராஜன், வருவாய் அலுவலர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் துர்காதேவி வரவேற்றார். தொகுதி எம்எல்ஏவும் அமைச்சருமான தா.மோ.அன்பரசன், ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இதில், கடந்த 22 ஆண்டுகளாக பழவந்தாங்கல் சுரங்கப்பாதையில் இருந்து நங்கநல்லூர் பிரதான சாலை இணைப்பு பணி கிடப்பில் உள்ளது. இத்திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அமைச்சரிடம் அப்பகுதி மக்களும் நலச்சங்க நிர்வாகிகளும் மனுக்களை வழங்கினர்.

பின்னர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், ஆதம்பாக்கம், திருவள்ளுவர் நகர் சாலை, ஆலந்தூர் எம்கேஎன் சாலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். வேளச்சேரியில் இருந்து பரங்கிமலைக்கு பறக்கும் ரயில் சேவை வரும் நவம்பர் மாதம் துவக்கப்படும் என்று உறுதியளித்து பேசினார்.

The post வேளச்சேரியில் இருந்து பரங்கிமலைக்கு பறக்கும் ரயில் சேவை நவம்பரில் துவங்கும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் உறுதி appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • புதுவை கடற்கரை ரோந்து பணியில் முதல்முறையாக ரோபோ!
  • புதுவை அரசின் ஊழல் குறித்து குடியரசு தலைவரிடம் புகார் அளிக்க காங்கிரஸ் முயற்சி
  • ஸ்டாலினின் தோல்வி மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள்: இபிஎஸ்
  • அகமதாபாத் விமான விபத்து பற்றி ஊக செய்திகளை வெளியிட வேண்டாம்: மத்திய அமைச்சர்
  • பிரதமர் மோடி ஜூலை 23-26 தேதிகளில் இங்கிலாந்து, மாலத்தீவுக்குப் பயணம்
  • ஜிம்கானாவை உதறிவிட்டு புதிய கிளப் உலகுக்கு இந்திய செல்வந்தர்கள் நகர்வது ஏன்?

You Might Also Like

வார இறுதி நாட்களை முன்னிட்டு 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம்: 16 ஆயிரம் பேர் முன்பதிவு: போக்குவரத்து துறை தகவல்

July 16, 2025

குரங்கணி முத்துமாலை அம்மன் கோயிலில் இன்று ஆனிப் பெருந்திருவிழா: பக்தர்கள் குவிந்தனர்

July 15, 2025

பேரிடர் காலங்களில் மக்களை மீட்க ஏதுவாக ராஜரத்தினம் மைதானத்தில் சென்னை காவல்துறை ஒத்திகை பயிற்சி: கமிஷனர் அருண் உத்தரவுப்படி நடவடிக்கை

July 17, 2025

வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன் மாநகராட்சி, நகராட்சிகளில் வெள்ள அபாய பகுதிகளில் பணிகளை முடிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

July 17, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?