
பனாஜி: ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் முதல் 3 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் ஒருநாள் ஓய்வுக்கு பின்னர் நேற்று 4-வது சுற்றின் முதல் ஆட்டங்கள் நடைபெற்றன.
இதில் இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, ஃபிடேவின் கீழ் பொது வீரராக பங்கேற்றுள்ள டேனியல் துபோவுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் 14-வது நகர்வின் போது ராணி முன்னால் இருந்த சிப்பாயை பிரக்ஞானந்தா கவனக்குறைவாக நகர்த்தினார். இந்த நகர்வு டேனியல் துபோவுக்கு வெற்றியை தேடிக்கொடுக்கும் நிலைக்கு கொண்டு செல்லக்கூடியதாக இருந்தது.

