
திரை நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் திருமணம் அடுத்த ஆண்டு உதய்பூரில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
‘கீதா கோவிந்தம்’ படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவும், நடிகை ராஷ்மிகாவும் முதல் முறையாக இணைந்து நடித்தனர். இந்த படம் ஹிட் வரிசையில் இணைந்தது. இதன் பின்னர் டியர் காம்ரேட் படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக தகவல் வெளியானது. அவ்வப்போது வெளிநாடுகளுக்கு இவர்கள் சுற்றுலா சென்று வருவதும் வழக்கம்.

