Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: அன்புமணி எனது பெயரை பயன்படுத்தக் கூடாது: பாமக பொதுக் குழுவில் ராமதாஸ் பேச்சு
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

அன்புமணி எனது பெயரை பயன்படுத்தக் கூடாது: பாமக பொதுக் குழுவில் ராமதாஸ் பேச்சு

EDITOR

கும்பகோணம்: அன்புமணி எனது பெயரை பயன்படுத்தக் கூடாது என கும்பகோணம் மாவட்ட பாமக பொதுக் குழுவில் ராமதாஸ் பேசியுள்ளார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகனும் பாமக தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. கட்சியில் முழு அதிகாரம் தனக்கே உள்ளது என்று இருவரும் கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி கட்சியில் தங்களது பலத்தை நிரூபிக்க இருவரும் போட்டி கூட்டத்தையும் நடத்துகிறார்கள்.

மேலும் அன்புமணியின் ஆதரவாளர்களை டாக்டர் ராமதாஸ் நீக்குவதும், அடுத்த சில நிமிடங்களில் நீக்கப்பட்டவர்கள் அதே பதவியில் தொடர்வார்கள் என்று அன்புமணி அறிவித்து அதிரடி காட்டுவதுமாக இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி இருவரும் மாறி மாறி ஒருவரையொருவர் பகிரங்கமாக குற்றம் சாட்டுவது மோதலின் உச்சத்தை காட்டுகிறது. இந்த மோதலுக்கு இடையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காமராஜர் சாலையில் உள்ள எஸ்.இ.டி. மஹாலில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் தஞ்சை, திருவாரூர் மாவட்ட பாமக மற்றும் வன்னியர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

* பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது;
அன்புமணி எனது பெயரை பயன்படுத்தக் கூடாது எனவும் இனிஷியலை வேண்டுமானால் போட்டுக்கொள்ளுங்கள். என் பேச்சைக் கேட்கவில்லை என்றால் என் பெயரை யாரும் பயன்படுத்தக்கூடாது. ஐந்து வயது குழந்தை போல் நான் செயல்படுவதாக சில கூறி வருகின்றனர். ஐந்து வயது குழந்தையான நான் தான் 3 வருடங்களுக்கு முன் அன்புமணியை பாமக தலைவராக்கியவன். தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை. தசரதன் ஆணையை ஏற்று ராமர் வனவாசம் சென்றார். எனது பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது என அன்புமணிக்கு ராமதாஸ் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post அன்புமணி எனது பெயரை பயன்படுத்தக் கூடாது: பாமக பொதுக் குழுவில் ராமதாஸ் பேச்சு appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • ‘எனது வளர்ச்சியை தன் வளர்ச்சியாகக் கருதியவர்’ – மு.க.முத்து மறைவுக்கு முதல்வர் புகழஞ்சலி
  • தாவரங்களின் ரகசிய ஒலிக்கு பதில் தரும் விலங்குகள் – ஆய்வில் புதிய தகவல்
  • எடப்பாடி அழைப்பை முற்றாக நிராகரிக்கிறோம்; சிவப்பு கம்பள வரவேற்பு அல்ல, ரத்த கம்பள வரவேற்பு: முத்தரசன் பேட்டி
  • அவரும் நானும்-பாகம் 2 நூல் வெளியீடு ஒத்திவைப்பு.!!
  • மு.க.முத்து மறைவுக்கு அன்புமணி இரங்கல்..!!
  • பாஜகவின் தலையாட்டி பொம்மையாக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார்: பெ.சண்முகம்

You Might Also Like

திருவள்ளூர் அருகே டேங்கர் ரயில் தீ விபத்தை தொடர்ந்து பயணிகள் வசதிக்காக 265 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

July 13, 2025

பிஇ, பிடெக் படிப்புகளுக்கு இன்று தரவரிசை பட்டியல்

June 26, 2025

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆக. 4-ல் நேரில் ஆஜராக வேண்டும் என ஐகோர்ட் உத்தரவு

July 14, 2025

காவல்துறையினர் சட்டம்-ஒழுங்கை பேணி காத்து நீதியை நிலைநாட்ட வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

June 30, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?