Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: அம்பத்தூரில் அதிகாலை பயங்கரம்; கர்நாடகா வங்கியில் பயங்கர தீ: ஆவணங்கள், இருக்கைகள், மேஜைகள் எரிந்து சேதம்
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

அம்பத்தூரில் அதிகாலை பயங்கரம்; கர்நாடகா வங்கியில் பயங்கர தீ: ஆவணங்கள், இருக்கைகள், மேஜைகள் எரிந்து சேதம்

EDITOR

அம்பத்தூர்: அம்பத்தூர் அருகே வங்கியில் இன்று அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அம்பத்தூர் பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கர்நாடகா வங்கி இயங்கி வருகிறது. நேற்று மாலை வேலை முடிந்ததும் ஊழியர்கள், வங்கியை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றனர். வங்கிக்கு, இரவு நேர காவலாளி ஒருவர் பணியில் இருந்து வருகிறார்.இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென வங்கியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை பார்த்ததும் காவலாளி அதிர்ச்சியடைந்தார்.

உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அம்பத்தூர் போலீசார் மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அதற்குள் தீ வங்கி முழுவதும் பரவியது. ஜன்னல் கண்ணாடிகள், அரை கண்ணாடிகள் உடைந்து சிதறியது. தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து செயல்பட்டு தண்ணீரை பீய்ச்சியடித்து மற்ற கட்டிடங்களுக்கும் தீ பவராமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் வங்கியில் உள்ள ஆவணங்கள் மற்றும் இருக்கைகள், மேஜைகள் எரிந்து சேதமானது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது சமூக விரோதிகளின் கைவரிசையாக உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post அம்பத்தூரில் அதிகாலை பயங்கரம்; கர்நாடகா வங்கியில் பயங்கர தீ: ஆவணங்கள், இருக்கைகள், மேஜைகள் எரிந்து சேதம் appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார் அமைச்சர் நாசர்
  • இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் இலங்கை தமிழர்களின் திருமணங்களை பதிவு செய்வதற்கு 25 மற்றும் 26ம் தேதிகளில் சிறப்பு முகாம்: தமிழ்நாடு அரசு
  • அஜித் படத்தை உறுதி செய்த ஆதிக் ரவிச்சந்திரன்!
  • முதல் 3 நாள் பப்ளிக் ரிவ்யூ ‘தடை’ கோரும் விஷாலுக்கு தனஞ்செயன் பதிலடி!
  • ‘எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர்; இதில் குழப்பமே இல்லை’ – அண்ணாமலை உறுதி
  • ‘விசிக, இடதுசாரிகளுக்கு இபிஎஸ் விரித்திருப்பது ரத்தினக் கம்பளம் அல்ல…’ – திமுக ரியாக்‌ஷன்

You Might Also Like

மதுரை ஆதீனத்திற்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது :காவல்துறை எதிர்ப்பு

July 16, 2025

பாஸ்போர்ட் தொலைந்து விட்டதாம், தேடியும் கிடைக்கவில்லையாம்; புதிய பாஸ்போர்ட் வழங்க கோரி சீமான் வழக்கு: மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

July 15, 2025

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரவுடி நாகேந்திரனின் நெருங்கிய கூட்டாளி கைது

July 1, 2025

வங்கக்கடலில் அடுத்தடுத்து காற்று சுழற்சி உருவாகும் தமிழ்நாட்டில் மழை தொடரும்: வானிலை ஆய்வாளர்கள் தகவல்

July 9, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?