Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: அம்மன் கோயில் சுற்றுலா வாகனத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

அம்மன் கோயில் சுற்றுலா வாகனத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

EDITOR

சென்னை: தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களை தரிசிக்க ஒரு நாள் சுற்றுலா பயணத்தொகுப்பை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் அம்மன் கோயில்களை தரிசிக்க தமிழ்நாடு அரசு சார்பில் சுற்றுலா ஏற்பாடு செய்துள்ளது. ஆடி மாதத்தின் ஒரு நாள் அம்மன் கோயில் சுற்றுலா வாகனத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

சட்டமன்றத்தில் இந்த ஆண்டு மானியக் கோரிக்கையில் ‘ஆடி மாதத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களுக்கு 2,000 பக்தர்கள் ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவர்’ என அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை, தஞ்சாவூர், மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களுக்கு பக்தர்கள் இலவசமாக அழைத்து செல்லப்பட உள்ளனர்.

இதற்கான செலவை அரசே ஏற்கும். அதன்படி, 25, ஆகஸ்ட் 1, 8 மற்றும் 15 ஆகிய தேதிகளில் 60 முதல் 70 வயதிற்குட்பட்ட மூத்த குடிமக்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். அந்த வகையில் ஆடி மாத அம்மன் கோயில்கள் ஆன்மிகப் பயணம் சென்னையில் இன்று காலை தொடங்குகிறது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோயிலில் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இக்குழுவினருக்கு திருவொற்றியூர் வடிவுடையம்மன், பாரிமுனை காளிகாம்பாள், மயிலாப்பூர் கற்பகாம்பாள், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் மற்றும் மாங்காடு காமாட்சி அம்மன் ஆகிய கோயில்களில் சிறப்பு தரிசனமும், மதிய உணவும் வழங்கப்படுகிறது.

The post அம்மன் கோயில் சுற்றுலா வாகனத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • பாஜகவை கழற்றிவிட்டு தவெக உடன் கூட்டணி அமைக்க அதிமுக முயற்சி: செல்வப்பெருந்தகை
  • பொதுக்கூட்ட பேச்சுக்காக அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து திருமாவளவனுக்கு விலக்கு
  • புஸ்ஸி ஆனந்துக்கு புதுச்சேரி முதல்வர் நேரில் பிறந்தநாள் வாழ்த்து: தடையை மீறி தவெக பேனர்
  • தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • “பிஹாரில் 20 லட்சம் பெண்கள் இப்போது லட்சாதிபதிகள்” – பிரதமர் மோடி பெருமிதம்
  • மதுபானக் கொள்கை முறைகேடு: சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகன் கைது

You Might Also Like

மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

July 17, 2025

சிறுமுகை அருகே குட்டையில் பதுங்கியிருந்த 7 அடி நீள ராட்சத முதலை

July 10, 2025

நல்லம்பள்ளி அருகே லாரி, டூவீலர் மோதி விபத்து சிறுவன் உள்பட இருவர் பலி

June 20, 2025

கோயில் நிலம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; 5 ஐஏஎஸ் அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

June 24, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?