
சென்னை: சர்வதேச கால்பந்து களத்தில் இருந்து மீண்டும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் இந்தியாவின் சுனில் சேத்ரி. கடந்த மார்ச் மாதம் தனது ஓய்வு முடிவுக்கு விடை கொடுத்துவிட்டு சுனில் சேத்ரி களம் திரும்பியது குறிப்பிடத்தக்கது.
ஆசிய கோப்பை 2027-க்கான கடைசி தகுதி சுற்றில் இருந்து இந்தியா வெளியேறியது. இதையடுத்து ஓய்வு பெறுவதாக சுனில் சேத்ரி அறிவித்துள்ளார். கடந்த 2024-ல் அறிவித்த ஓய்வு முடிவை திரும்ப பெற்றுக்கொண்ட பின்னர் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடிய அவர், 6 போட்டிகளில் ஒரே ஒரு கோல் மட்டுமே பதிவு செய்தார்.

