Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: ஆர்ப்பரித்து கொட்டுகிறது தண்ணீர்; சுருளி அருவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்: இதமான சூழலில் ஜில் குளியல்
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

ஆர்ப்பரித்து கொட்டுகிறது தண்ணீர்; சுருளி அருவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்: இதமான சூழலில் ஜில் குளியல்

EDITOR

கம்பம்: சுருளி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. தேனி மாவட்டம், கம்பம் அருகே, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சுருளி அருவிப் பகுதியானது பிரபலமான சுற்றுலா இடமாக உள்ளது. மேலும் அருகே பூத நாராயணர் கோயில், சுருளி வேலப்பர் கோயில்கள் உள்ளன. முன்னோர் வழிபாட்டுக்கு முக்கிய இடங்களில் ஒன்றாகவும் உள்ளது. இதனால் ஆன்மீக தலமாகவும் பிரசித்தி பெற்றுள்ளது. இதனால் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் இங்கு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். தென்மேற்கு பருவமழை தொடங்கிய பின்னர், கேரள பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அருவிக்கு தொடர்ச்சியாக தண்ணீர் வரத்து உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள அரிசி பாறை, ஈத்தக்காடு, மேகமலை வனப்பகுதி மற்றும் தூவானம் அணை போன்ற நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை நீர் சுருளி அருவிக்கு வருகிறது. தற்போது அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது. மேலும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தற்போது இதமான காலநிலை காணப்படுகிறது. இதனால் அருவியில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்கள் அருவியில் ஆரவாரமாக குளித்து மகிழ்கின்றனர். அதிக அளவில் கூட்டம் இருப்பதால் பயணிகள் காத்திருந்து குளித்து வருகின்றனர். வனத்துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்தி பயணிகளை குளிப்பதற்கு அனுமதித்து வருகின்றனர். மேலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post ஆர்ப்பரித்து கொட்டுகிறது தண்ணீர்; சுருளி அருவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்: இதமான சூழலில் ஜில் குளியல் appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • ஹைதராபாத் கார் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
  • பரஸ்பர நலன், சர்வதேச விவகாரங்களில் ரஷ்யா, இந்தியா, சீனா மீண்டும் இணைந்து செயல்பட முடிவு
  • ‘மான்செஸ்டர் போட்டியில் ஆடும் லெவனில் இந்தியா ஒரு மாற்றம் செய்ய வேண்டும்’ – ரஹானே பகிர்வு
  • ஐஎன்எஸ் நிஸ்தர் மீட்பு கப்பல் கடற்படையில் இணைப்பு!
  • மயிலாடுதுறை டிஎஸ்பி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எஸ்பி, இன்ஸ்பெக்டரிடம் டிஐஜி நேரில் விசாரணை
  • தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான்: அழுத்தமாக சொன்ன தமிழிசை

You Might Also Like

நடிகர்கள் ஸ்ரீ காந்த், கிருஷ்ணாவை தொடர்ந்து போதைப்பொருள் விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது

July 5, 2025

கடலில் பலத்த காற்று எதிரொலி; சின்ன முட்டம் துறைமுகத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை: 350 விசைப்படகுகள் நிறுத்தி வைப்பு

July 17, 2025

பள்ளிபாளையம் அருகே பரபரப்பு சம்பவம்; தனியாக இருந்த மூதாட்டி கொலை

June 22, 2025

பால் விற்பனையை அதிகரிக்கும் வகையில் சென்னையில் 2 புதிய ஆவின் உற்பத்தி மையம் திறக்க முடிவு: மாதவரம், அச்சரப்பாக்கம் உள்ளிட்ட இடங்கள் தேர்வு அதிகாரிகள் தகவல்

June 22, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?