புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் இந்துக்களின் பாதுகாப்புக்கு துப்பாக்கி உரிமம் தரும் விதிமுறைகளை தளர்த்த முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு சர்ச்சை துறவியான யத்தி நரசிங்கானந்த் கடிதம் எழுதியுள்ளார்.
உ.பி.யின் காஜியாபாத்தில் உள்ள தாஸ்னா தேவி கோயில் மடத்தின் தலைவர் சுவாமி யத்தி நரசிங்கானந்த். இவர் இஸ்லாமியர்களுக்கு எதிராக அவ்வப்போது பேசி வருவதால் சர்ச்சைக்குள்ளானவர்.