Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்திற்கென பிரத்யேக இணையதளம்.. முதலமைச்சர் மேற்பார்வையில் ‘ஒரு மணி நேரத்திற்குள் பயன்’ பெற்ற மக்கள்!
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

“உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்திற்கென பிரத்யேக இணையதளம்.. முதலமைச்சர் மேற்பார்வையில் ‘ஒரு மணி நேரத்திற்குள் பயன்’ பெற்ற மக்கள்!

EDITOR

கடலூர் : தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள பொதுமக்களின் வீடு தேடி வரும் தமிழக அரசு திட்டங்களின் பயன்களை மக்கள் பெறும் வகையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டத்தை கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சாதிச் சான்றிதழ், பட்டா பெயர் மாற்றம், ஆதார், ரேஷன் அட்டையில் திருத்தம் உள்ளிட்ட சேவைகள் இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படுகின்றன. மேலும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் உங்கள் மாவட்டங்களில் முகாம் நடைபெறவுள்ள இடத்தின் விவரங்களை அறிய https://ungaludanstalin.tn.gov.in என்ற பிரத்யேக இணையதளத்தை தொடங்கியுள்ளது தமிழ்நாடு அரசு. இந்த நிலையில், முதலமைச்சர் அவர்கள் சிதம்பரத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை தொடங்கி வைத்து, ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே, 3 கோரிக்கை மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது.

காதொலி கருவி வேண்டி விண்ணப்பித்த சபரீஷ் என்ற மாற்றுத்திறனாளி பயனாளிக்கு காதொலி கருவியையும், மருத்துவ காப்பீட்டு அட்டை வேண்டி விண்ணப்பித்த திருமதி செந்தமிழ் செல்வி என்ற பயனாளிக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீட்டு அட்டையும், மின்சார இணைப்பு பெயர் மாற்றம் வேண்டி விண்ணப்பித்த பெருமாள் என்ற பயனாளிக்கு மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கான ஆணையினையும் முதலமைச்சர் வழங்கினார்.மேலும், “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் வேளாண்மை – உழவர் நலத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை போன்ற பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்களை விளக்கி அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்.

The post “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்திற்கென பிரத்யேக இணையதளம்.. முதலமைச்சர் மேற்பார்வையில் ‘ஒரு மணி நேரத்திற்குள் பயன்’ பெற்ற மக்கள்! appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
  • பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை; 4 பேருக்கு ஆயுள் தண்டனை
  • வளர்ச்சி அடைந்த பிஹாரை உருவாக்க மத்திய அரசு தீவிரம்: பிரதமர் மோடி உறுதி
  • பாகிஸ்தானை சேர்ந்த டிஆர்எப் உலகளாவிய தீவிரவாத அமைப்பு – அமெரிக்கா அறிவிப்பு; இந்தியா வரவேற்பு
  • ஹைதராபாத் கார் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
  • பரஸ்பர நலன், சர்வதேச விவகாரங்களில் ரஷ்யா, இந்தியா, சீனா மீண்டும் இணைந்து செயல்பட முடிவு

You Might Also Like

திராவிட மாடல் ஆட்சியில் தொழில்துறை மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

June 19, 2025

முருகமலை அடிவாரப்பகுதிகளில் புதிய நீர்தேக்க தடுப்பணைகள்: விவசாயிகள் எதிர்பார்ப்பு

July 10, 2025

போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் ஒரே நாளில் 6 விமானங்கள் ரத்து

July 16, 2025

பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு வரும் 25ம் தேதி முதல் ஹால்டிக்கெட் வினியோகம்: இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய தேர்வுத்துறை அறிவுறுத்தல்

June 23, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?