
கடிஹார்: பிஹாரில் இரண்டாம் கட்டமாக 122 பேரவை தொகுதிகளுக்கு வரும் 11-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பிஹாரின் கடிஹாரில் என்டிஏ சார்பில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
பிஹாரில் ஊடுருவல்காரர்களை பாதுகாக்கும் பேரணியை லாலுவும் ராகுல் காந்தியும் தொடங்கியுள்ளனர். சீமாஞ்சலை ஊடுருவல்காரர்களின் கோட்டையாக அவர்கள் மாற்ற விரும்புகின்றனர்.

