
பிரபல இந்தி திரைப்பட இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப், தமிழில் இமைக்கா நொடிகள், மகாராஜா உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: கடந்த காலத்தில், குறைவான திரையரங்குகள் இருந்தன. ஆனால் ஒரு படம் நன்றாக இருக்கிறது என்றால், அது வாய்மொழியாகவே பரவி வெற்றி பெற்றது. இன்று நிலைமை மாறிவிட்டது. அதிகமாக விளம்பரப்படுத்துகின்றனர்.

