
ஜெயலலிதா காலம் தொட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுக அணியில் பயணித்தவர் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு. அண்மைக் காலமாக திமுக அரசுக்கு வாக்காலத்து வாங்குவதில் திமுக-வினரை விட ஒருபடி மேலாகவே ஊடக விவாதங்களில் விளாசி வருகிறார். இந்நிலையில், அண்மையில் அறிவாலயத்துக்கே சென்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசி இருக்கும் தனியரசு, ‘இந்து தமிழ் திசை’க்காக அளித்த சிறப்புப் பேட்டி.
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தொடங்கியதன் நோக்கம் என்ன?

